மாற்று! » பகுப்புகள்

அனுபவம் 

அப்பாவின் நினைவாக…    
ஆக்கம்: சேவியர் | September 29, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

வெறும் நான்கு வருடங்கள் தானா ? ஒரு ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் என்றல்லாவா நினைத்தேன் என்கிறது மனது. ஒரு வழிகாட்டியாய், தோழனாய், தியாகியாய், கடமை தவறாத அப்பாவாய் என எத்தனையோ பரிமாணங்களைக் காட்டிய தந்தை மறைந்தபின் நாட்கள் சுமை இழுக்கும் கழுதையைப் போல பெருமூச்சு விட்டுத் தான் நகர்கிறது. . வரப்புகளில் எனை நடக்கப் பழக்கியதும், சர்ப்பக் குளத்தில் நீச்சல் பழக்கியதும்,...தொடர்ந்து படிக்கவும் »

ஊரோடி - இரண்டு வருடம் - சாதனைகள் சோதனைகள்    
ஆக்கம்: பகீ | September 26, 2008, 12:23 am | தலைப்புப் பக்கம்

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களேஇல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.எது சாத்தியம்?அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ளஎப்படி நேரம் இருக்கிறது?இப்படி பலக் கேள்விகள்.இவை எல்லாவற்றிற்கும் என் பதில்...தொடர்ந்து படிக்கவும் »

கடித இலக்கியமும், இணைய எழுத்தாளர்களும்    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | September 21, 2008, 11:21 pm | தலைப்புப் பக்கம்

சில வருடங்களாய் இணையம் மூலம் அறிமுகமாகிய தோழிகளுடன் ஒரு சந்திப்பு சென்னை வந்தால் கட்டாயம் உண்டு. பாட்டி ஆன மூத்த பதிவரில் இருந்து,போன மாதம் கல்யாணம் செய்துக் கொண்ட இளசு வரை, ஹோட்டல் என்றால் மற்ற டேபிளில் இருப்பவர்கள் திரும்பி பார்க்குமாறு கலகலப்பு இருக்கும்.கடற்கரை என்றால் மாங்காய் பத்தையோ அல்லது வாங்கிவந்த பலகாரங்களையோ மொசுக்கிக் கொண்டு வட்டமாய் உட்கார்ந்துக்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா 2008 - சென்றதும் வந்ததும்    
ஆக்கம்: செல்வராஜ் | September 16, 2008, 12:16 am | தலைப்புப் பக்கம்

‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை...தொடர்ந்து படிக்கவும் »

குவியம்    
ஆக்கம்: poorna | September 14, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டு ராணி முத்து காலண்டரில் ராசி பலன் படிக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து பயந்து கண்மருத்துவரிடம் அழைத்துப்போய்க் கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டுவிட்டார் அப்பா. வாங்கிய புதிதில் என்னுடைய கண்ணாடி பற்றி எனக்கு ரொம்பவும் பெருமை இருந்ததுண்டு. ‘கொஞ்சம் நல்ல frame. குழந்தை கீழ எல்லாம் போட்டா அவ்வளவு சுலபத்துல உடையாது சார்’ என்று...தொடர்ந்து படிக்கவும் »

சட்டவிரோத ´குடி` யேற்ற வாசிகள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 2, 2008, 5:35 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகமாகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »

அவள் வருகிறாள்    
ஆக்கம்: Chandravathanaa | September 1, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்

அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய்...தொடர்ந்து படிக்கவும் »

BMW வில் கூட எமன் வரலாம்    
ஆக்கம்: Thooya | August 26, 2008, 7:09 pm | தலைப்புப் பக்கம்

வழமையான ஒரு செவ்வாய்கிழமை. பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு வேலைத்தளத்தை நோக்கி காரில் பயணித்து கொண்டிருக்கின்றேன். கைத்தொலை பேசி அலறுகின்றது. கார் ஓட்டும் போது யார் எத்தனை முறை அழைத்தாலும் பதிலளிப்பதில்லை என சமீபத்தில் தான் ஒரு சத்தியம் பண்ணியது நினைவுக்கு வந்து தொலைத்தது. சாலை விளக்கு சிவப்பானதும் யார் என பார்த்தால் என்னுடைய மாமா. (உனக்கிருக்கும் 1000 மாமாவில்...தொடர்ந்து படிக்கவும் »

தேநீரில் சிநேகிதம் - 1    
ஆக்கம்: aravind | August 16, 2008, 12:31 pm | தலைப்புப் பக்கம்

நானும் கொஞ்சம் செய்கிறேன் Random ramblings அலைபேசி காதலர்களுக்கு  ஒரு வரப்பிரசாதம் என நிறைய பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு மட்டுமே அப்படி, நமக்கல்ல என்று நான் புரிந்து கொண்டேன். எங்கள் பேருந்தில் தினமும் ஏறுகிற போதே அந்தப் பெண் அலைபேசியில் பேசியபடியே தான் ஏறுவாள். பேருந்து அலுவலகம் போய் சேரும் வரை பேச்சு. அவள் பேச்சுகள் இரைச்சலில் பெரும்பாலும்...தொடர்ந்து படிக்கவும் »

சத்யமும் சில குறிப்புகளும்    
ஆக்கம்: ஆடுமாடு | August 15, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்

ஒன்றாக குப்பை கொட்டியவன் இயக்கியதாலும், விஷால் என்னிடம் சொன்ன பில்டப்பாலும் பார்க்க நேர்ந்தது 'சத்யம்' படத்தை. வித்தியாசமான கதை களைத்தை சிந்திக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு மத்தியில் ஆக்சன் குப்பைக்குள் அகப்பட்டுக்கொண்ட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். முதல் பாதியில் குழந்தைகளுடன் நயன் அடிக்கும் சின்ன சின்ன விஷயங்களை ரசிக்க முடிகிறது. வில்லன் என்ற பெயரில் கோட்டா...தொடர்ந்து படிக்கவும் »

ரைஃபிளால் நான் சுட்டபொழுது...    
ஆக்கம்: ஸ்ரீதர் நாராயணன் | August 11, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்

'யே ஹை ஃபையரிங் பின். அபி காலி ஹை. க்யோங் கி யே ப்ராக்டிஸ் கர்னேகா ரைஃபிள் ஹை' நாயக் (இரண்டுப் பட்டி) உண்ணி கிருஷ்ணன் NCC Cadets-களுக்கு .303 ரைஃபிளை பிரித்துப் போட்டு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் போய் 11 ரைஃபிள் எடுத்துக் கொண்டு சேதுபதி ஸ்கூல் மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பத்தாம் வகுப்பு. அடுத்த மாதம் பரீட்சை. அதை B சர்டிபிகேட்...தொடர்ந்து படிக்கவும் »

உதிரிக் குறிப்புகள் 2    
ஆக்கம்: பரத் | August 10, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்

படத்தில் இருக்கும் இந்த நபரை யாரென்று அடையாளம் தெரிகிறதா? பார்க்க யாரோ பாத்திரக் கடை முதலாளி போல சாதுவாகத் தோன்றும் இவர் உண்மையில் படுவில்லங்கமான ஆள். இவரை ஒருவிதத்தில் நம் எல்லருக்கும் தெரிந்திருக்கும், உண்மைப்பெயரில் அல்ல, வேறு ஒரு நிழல் பெயரில். இவர் யாரென்பதை பதிவின் இறுதில் காண்க.இவரைப் பற்றி ஒரு கார்(மகிழ்வுந்து!!) ஓட்டுனர் கூறியது:'இவருக்கு நான் சுமார் 50...தொடர்ந்து படிக்கவும் »

நினைத்தாலே இனி(கச)க்கும் - 2    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | August 7, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்

முதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல்...தொடர்ந்து படிக்கவும் »

கடற்கரையில் சில காகங்கள்    
ஆக்கம்: Admin | August 3, 2008, 9:28 pm | தலைப்புப் பக்கம்

கடற்கரைகள் பொழுதுபோக்கிற்கான இடமாக மாறிய பிறகு கடல் கரையிலிருந்து வெகுதூரம் பின்னகர்ந்துவிட்டதாக தோன்றுகிறது. சென்னை கடற்கரைகளில் அலைமோதும் கூட்டம் மூச்சுத் திணற வைக்கிறது. கடல் காற்று போதாமல் ஆகிவிடுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லியட்ஸ் பீச்சிற்கு சென்றிருந்தேன். தி.நகர் ரங்கநாதன் தெருவைவிட கடுமையான கூட்டம். வாகனங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்களூர்-0 9    
ஆக்கம்: (author unknown) | July 29, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

"சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடிப்பட்டிருக்கிற‌தாம்" "என்ன ஆயிற்று?" "என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்" புதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில்...தொடர்ந்து படிக்கவும் »

எனது உடற்பயிற்சிக்கூடங்கள் - சொந்தக் கதை    
ஆக்கம்: அபுல் கலாம் ஆசாத் | July 28, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்

சென்னை - திருவல்லிக்கேணி வளர்ப்பிற்குச் சிறிதும் மாற்றமில்லாமல் எல்லா மாணவர்களையும் போலவே எனக்கும் உடற்பயிற்சியில் ஆர்வம் இருந்தது. தாமைரை இலை அளவிற்கு விரிந்த சட்டைப்பட்டைக்குள் (காலர்) பஞ்சு வைத்துத் தைத்த சட்டைகள் போட்டு சாண்டோவாகிவிடத் துடித்த சில நாள்களும் கணக்கில் உண்டு. எல்லாம் துவங்கியது சென்னை - ஐஸ்ஹவுஸ் மாஸ்டர் உடற்பயிற்சிக்கூடத்தில்தான்....தொடர்ந்து படிக்கவும் »

நாலு ரன், ரெண்டு விக்கெட்    
ஆக்கம்: para | July 26, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை - வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் - வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன். அலுப்பில் அப்போது...தொடர்ந்து படிக்கவும் »

தலைமறைவு    
ஆக்கம்: ஜெயமோகன் | July 24, 2008, 8:48 pm | தலைப்புப் பக்கம்

நகைச்சுவை தமிழ்நாட்டில் அதிகமாகப் புழங்கும் சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல் பேசியை எடுத்ததுமே ஹலோ என்பதற்குப்பதிலாக அதைச் சொல்லலாம் என்றும். ஆரம்பத்தில் அதிர்ச்சிதான். ”ஹலோ நான் ஜெயமோகன் பேசுறேன்..” என்ற பவ்யமான குரலுக்குப் பதிலாக ”தாயோளி!” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்?” ”தாயோளி!” ”யாரு வேணும்?” ”நீதாண்டா வேணும் தாயோளி” ”ஸாரி நீங்க வேற...தொடர்ந்து படிக்கவும் »

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2    
ஆக்கம்: யாத்ரீகன் | July 23, 2008, 2:02 pm | தலைப்புப் பக்கம்

வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள்.ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு வீடுகளின் முன்னிலும் குறைந்தது 4/5...தொடர்ந்து படிக்கவும் »

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2    
ஆக்கம்: யாத்ரீகன் | July 23, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1 வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள். ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »

சிற்றுரையும் பேருரையும் - S. Ramakrishnan    
ஆக்கம்: (author unknown) | July 23, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல எல்லா பள்ளிகளிலும் நடைபெறும் விஷயம் என்பதால் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினேன். மொத்தமே ஒரு மணி நேர நிகழ்ச்சி இதில் நீங்கள் பத்து நிமிசம் பேசினால் போதும் என்று தெரிந்த ஒரு ஆசிரியர்  வழியாக அன்புக் கட்டளையிட்டு கலந்து...தொடர்ந்து படிக்கவும் »

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் - S. Ramakrishnan    
ஆக்கம்: (author unknown) | July 23, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

          சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையான ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள்  மற்றும் பொது வாசகர்களுடன் நிகழ்த்தபட்ட உரையாடல்களும்...தொடர்ந்து படிக்கவும் »

நாங்க திருடனை பிடித்த கதை!!!    
ஆக்கம்: அபி அப்பா | July 23, 2008, 4:23 am | தலைப்புப் பக்கம்

நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது. அப்போது எங்க ஏரியாவிலே அங்கங்க தொடர்ச்சியா திருட்டு போய்கிட்டு இருந்துச்சு. பெரிய கோவில் வீதிகள், தைக்கால் தெரு பக்கம் எல்லாம் தொடர் திருட்டு நடக்கவே தெரு பெருசுங்க எல்லாம் போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டரும் தெருவுக்கு வந்துட்டார். தெருவே பரபரப்பா ஆகிடுச்சு. ராதாவுக்கு தெருவிலே திருட்டு...தொடர்ந்து படிக்கவும் »

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1    
ஆக்கம்: யாத்ரீகன் | July 22, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது. >>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம்...தொடர்ந்து படிக்கவும் »


கிரிக்கெட்: பேச்சிலும் beach-இலும்!    
ஆக்கம்: Badri | July 21, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வெள்ளியன்று மெட்ராஸ் புக் கிளப் ஆதரவில் “IPL and its impact on the future of cricket in India” என்ற தலைப்பில், தாஜ் கன்னிமரா ஹோட்டலில் பேசினேன்.நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக கூட்டம் வந்திருந்தது. மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்கள்தான். சுமார் 40-50 பேர் இருந்திருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள். சில நடுத்தர வயதினர். 35-க்குக்கீழ் இரண்டு பேர்தான் கண்ணில் பட்டனர்.சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்...தொடர்ந்து படிக்கவும் »

அவியல் – ஜூலை 18    
ஆக்கம்: பரிசல்காரன் | July 18, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்

நேற்று முழுவதும் இணையம் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை! அப்படி ஒன்றிரண்டு முறை வந்தபோதும், இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருந்ததால் பலருக்கும் போய் பின்னூட்டம் போட முடியவில்லை. இதுபற்றி எழுதும் போது, நண்பர் சென்ஷி எனக்கெழுதிய ஒரு மடல் நினைவுக்கு வருகிறது. இதோ அது..“சில நாட்களாக என்று சொல்ல முடியாமல் பல நாட்களாகவே இணையத்தொல்லை இருந்து வருகிறது.பதிவை...தொடர்ந்து படிக்கவும் »

சிலகேள்விகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 17, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களாக எனக்கு வந்த தனிப்பட்ட மின்னஞ்சல்களில் கேட்கபப்ட்ட வினாக்களுக்கான என் எளிமையான விளக்கங்கள் இவை. 1. எழுத்தாளர்கள் எல்லாம் வலைப்பூக்காரர்களாக மாறுகிறார்களே? * 2. இணைய எழுத்திலேயே மூழ்கிவிட்டீர்களா? இப்போதெல்லாம் வேறு எதையும் எழுதுவதேயில்லையா என்ன? * 3 இணைய வாசகர்கள் மட்டுமே இப்போது உங்களை படிக்க முடிகிறது.அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்    
ஆக்கம்: கானா பிரபா | July 12, 2008, 9:13 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை வானொலி என்னும் ஊடகம் உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புக்கு முன்னோடியாக இருந்த காலம் அது. தனித்துவம் மிக்க ஒலிபரப்புக் கலைஞர்கள், படைப்பாளிகளை உருவாக்கிய அந்த வானொலிக் களத்தில் தோன்றிய சிறப்பு மிகு கலைஞன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள். வானொலியில் செய்தி அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நடிகராக விளங்கிய இவர் கடந்த ஜூன் 6, 2008 இல் இந்த உலகில் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »

கவுர்மெண்ட் பேங்கில் ஒரு நாள் அனுபவம்    
ஆக்கம்: இம்சை | July 8, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

வணக்கம், கடந்த ஒரு வாரகாலமாக ஒரு முன்னனி நேசனல் பேங்க்கில் சொசைட்டி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவதற்காக இங்கு (குல்பர்கா) முயற்ச்சி செய்துவந்தேன். இன்று வரை 5 முறை வேறு வேறு டாக்குமெண்ட் தர கூறி அலைய விட்டனர். 1. ஆபிஸ் பேரர்ஸ் அவர்கள் முகவரி , ஆண்டு வருமானம் பற்றிய டாக்குமெண்ட்.2. சொசைட்டி மெம்பர்ஸ் அனைவரின் பெயர் , வயது , அட்ரெஸ்3. 2 போட்டா வித் சிக்னேச்சர்4. சொசைட்டி பேன் நெம்பர்5....தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 8 ஜூலை 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | July 8, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்

சனிக்கிழமை மாலை இசையருவி(கலைஞர்) தொலைக்காட்சியின் தமிழிசை விருது வழங்கும் விழாவுக்கு போய் இருந்தேன்.(வேடிக்கை பார்க்க என்று நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.. ) பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை. இலவச பாஸ் என்று நண்பர்கள் அழைக்க, பிக்-அப் அண்டு டிராப்க்கும் ஆள் இருக்க கிளம்பி விட்டேன்.  ஆறு மணிக்கு துவங்கும் விழாவுக்கு ஐந்து மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்    
ஆக்கம்: நந்தா | July 7, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது. நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான்...தொடர்ந்து படிக்கவும் »

நரைத்த கண்ணீர்    
ஆக்கம்: த.அகிலன் | July 3, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

01. மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒப்பாரிகளையும் துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளையும் கடந்து வந்து விட்டேன் என்கிற எனது கனவுகளை அந்தக்கிழவர் இன்றைக்குத் தகர்த்துவிட்டார். எனது புன்னகையைத் தன்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது  வெறும் புன்னகை மெழுகு பூசப்பட்டிருக்கும் துயரத்தின் பொம்மை என்று...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 2ஜூலை 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | July 2, 2008, 7:52 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஞாயிறு மதியம் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக போய் இருந்தேன். சாப்பிடவே சிரம்பப்படும் அளவுக்கு மிகுந்த காரமாக இருந்தது. சாப்பாடு முடிந்த வெளியே வந்தோம். சிகரெட்டை புகைத்து விட்டு கதையளந்தபடி நடந்தோம். சந்துக்குள்ளிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும் நண்பரை அனுப்பி விட்டு, தியாகராயா நகர் போக வேண்டி...தொடர்ந்து படிக்கவும் »

புலம் பெயர்ந்த NRI    
ஆக்கம்: ambi | July 2, 2008, 4:46 am | தலைப்புப் பக்கம்

சென்னைக்கும் பெங்களூருக்கும் நான் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருப்பதால் தான் லாலுவால் துண்டு விழாமல் ரயில்வே பட்ஜெட் போட முடிகிறது என இப்பதிவை ஆரம்பித்தால் இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறபடியால் நேரே மேட்டருக்கு வருகிறேன். (மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)உலக...தொடர்ந்து படிக்கவும் »

சந்திரா என்றொரு அழகி    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | June 30, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற...தொடர்ந்து படிக்கவும் »

பின்னிரவுக் குறிப்புக்கள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | June 23, 2008, 6:36 pm | தலைப்புப் பக்கம்

சிறுகதைகள் எழுதுவதற்கு நான் வோர்க் அவுட் (work out) செய்வதில்லையென சோமிதரன் கடிந்து கொண்டான். ஆவணப்படம் எடுக்கிற அவனுக்கு பீல்ட் வேர்க் சரி. எனக்கெதுக்கு என புரியவில்லை. அடப் போடா.. எனக்கு நடந்ததையும் பார்த்ததையும் கலந்து கட்டி எழுதுறதுக்கு எதற்கு பீல்ட் வேர்க் செய்யோணும்..? ரொம்ப முக்கியம் என்றேன் நான். நீ பத்து வருசத்துக்கு முதல் எழுதிய கதைகள் அப்போதைக்கு தரம்....தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 19 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 19, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

மாயமோ? என்னமோ தெரியலை.. எனக்கு பயர் பாக்ஸ் மீது கொள்ள ஆசை இருந்துவருகிறது. ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். இந்திய தேதியா.. அமெரிக்க தேதியான்னு தெரியலை. ஆனா.. அமெரிக்க தேதியில.. நான் புதிய பயர்பாக்ஸை தரவிறக்கிக்கொண்டேன். இனி பயர் பாக்ஸில் align=justify தொல்லை இல்லாமல்.. தமிழை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »

❒ திண்ணை அனுபவங்கள்    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 16, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

தனது பதிவில் பாலபாரதி திண்ணை வைத்த வீடுபற்றிய அனுவங்களை எழுத தூண்டி இருந்தார். நான் பிறந்த வீட்டில் (அம்மா வீடு) ஓட்டு வீடானாலும் மாடி வீடு. மாடிக்கு தரையாக மரப்பலகைகள் வைத்து அடிக்கப் பட்டிருக்கும். மாடிக்குச் செல்ல அகலமான மரப்படிகளுடன் ஏணி போன்ற அமைப்பு. மாடியில் பெரிய நெல்பத்தாயமும் சுவர்களில் பழைய இரும்பு ஆயுதங்களும் இருக்கும். குங்குமம் வைக்கப் பட்டு பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 15 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 15, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய்...தொடர்ந்து படிக்கவும் »

திண்ணையைப் பற்றிய எனது நினைவுகள்.....!    
ஆக்கம்: நாடோடி இலக்கியன் | June 13, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்

"அண்ணன் எப்போ போவான்,திண்ணை எப்போ காலியாகும்" என்று ஒரு சொல் உண்டு,ஆனால் இங்கே என் அண்ணனே (தஞ்சாவூரான்) மனமுவந்து, "இந்தாடா தம்பி திண்ணை" என்று கொடுத்திருக்கிறார்.இப்போ இந்தத் திண்ணையை வைத்துக் கொண்டு என்ன செய்வது,ஒன்னுமே தோணல. திண்ணையைப் பற்றி ஆளாளுக்கு எழுதிய பிறகு, எழுத புதிதாக ஒன்றுமில்லையென்றாலும்,என்னையும் மதிச்சு எழுத சொன்னதால, ஏதோ எனக்குத் தெரிந்த,அறிந்த...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 06 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 6, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

நான் வழக்கமாக சாப்பிடும் கடை நேற்று பூட்டியிருந்தது.(இன்றும் தான்). அதனால்.. வேறு ஒரு கடையில் சாப்பிட்டேன். அது என்னமோ செய்ய.. இரவெல்லாம் ஒரே அவதி! இரவில் எழுத வேண்டிய பதிவை.. இன்று அதிகாலை எழுதி.. நேற்றைய தேதியில் எடிட் பகுதியில் செட் செய்து.. காலையில் போஸ்ட் போட்டு விட்டேன். அதில் எழுதி இருந்த திண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்தில் நேரில் கண்டது - 21 ஆண்டுகள் முன்பு    
ஆக்கம்: நாகார்ஜுனன் | June 5, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்

குளிர் மதியம்.ஈழத்தின் காடு மற்றும் கடலின் ஊடே இந்திய விமானம் திருகோணமலைத் துறைமுகத்தை நெருங்கியபோது நிருபர்கள் அனைவரும் குலுக்கலையும் மீறி வட்டக்கண்ணாடி ஜன்னலருகில் முகங்களைப் புதைக்கிறோம்.கடல்சூழ் மலையும் மலைசூழ் கடலும் தூரத்திலிருந்து கோணேஸவரர் ஆலயமும் குரங்குப்பாலமும் ஜன்னலில் பார்க்கப்பார்கக் மறைய, நேர்கீழே இந்தியக் கடற்படைக் கப்பல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 05 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 5, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

எப்போதுமே என் மீது எனக்கு மீது பரிதாப உணர்ச்சியும், கழிவிரக்கமும் உண்டு. அதே அளவுக்கு என் மீது எனக்கு கோபமும், வருத்தமும் கூட உண்டு. இவை இருப்பதால் தான்.. உள்ளுக்குள் உந்தப்பட்டு மேலே மேலே என்று வர முயன்றுகொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் என் அருகில் இருப்பவர்கள் மீது நான் காட்டும் கோபம் கோழிக் காமம் மாதிரி.. வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. ஆனால்.. முன்பு எல்லா...தொடர்ந்து படிக்கவும் »

எச்சரிக்கை    
ஆக்கம்: தாரணி பிரியா | June 4, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பி எனக்குமே அவன் தம்பி மாதிரிதான். அறிவான அழகான பையன். அவனுடன் பேசும் எல்லோருக்குமே பத்தாவது நிமிடத்தில் அவனை பிடித்துவிடும் அவ்வளவு நட்பான பையன். பிரியாக்கா என்று அவன் உரிமையாய் அழைத்து பேசும் போதெல்லாம் இவன் நிஜமாவே நம்ம கூட பிறந்து இருக்க கூடாதா என்று தோன்றும், அவன் இருக்குமிடத்தில் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 4 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 4, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

புதிய அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுவதற்கு முன் மெடிக்கல் செக்கப் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அவர்களே ஒரு இடத்தையும் பிக்ஸ் செய்து, ஒரு கடிதத்தை கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு மட்டும் வந்துடுங்க என்றும் சொல்லி விட்டார்கள். அதில் கொடுமை என்னவென்றால்.. வெறும் வயிற்றுடன் காலை 7.30 மணிக்கு ஸ்கேன் செண்டரில் இருக்கவேண்டும் என்ற உத்தரவு வேறு. தரமணியில்...தொடர்ந்து படிக்கவும் »

மழையே மழையே மெத்த பெய் வண்ணான் வீட்டில் நிறைய பெய்    
ஆக்கம்: Thooya | June 3, 2008, 8:59 pm | தலைப்புப் பக்கம்

மழை காலத்தில் தூங்கவிடாமல் எழுப்புவது பாவம் என்றால், எழுப்பியதோடு நில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவது பெரும் பாவம். இந்த பாவத்தையும், பெரும்பாவத்தையும் என் மாமா செய்து கொண்டிருக்கிறார். என்ன கொடுமை, அட வேலைக்கு போய் தான் ஆகணும் என்றால் அவங்க அவங்க போக வேண்டியது தானே! எதுக்கு என்னை எழுப்பி, என் சாபத்தை வாங்கிட்டு!எங்க ஊர்ல மழைகொட்டிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

மனிதர்கள் - பிரம்பு டீச்சரம்மா    
ஆக்கம்: Sai Ram | June 3, 2008, 2:29 pm | தலைப்புப் பக்கம்

நான் பள்ளியில் இருந்த போது பிரம்பிற்கு பேர் பெற்ற ஒரு டீச்சரம்மா இருந்தார்கள். அவரை கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஒரு கிருஸ்துவ பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாம் மூத்தவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியை தான் நம்ம பிரம்பு டீச்சரம்மா.நான்காம் வகுப்பில் இருக்கும் போதே அடுத்த வருடம் பிரம்பு டீச்சரம்மாவிடம் பிரம்படி வாங்க வேண்டுமே...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 10    
ஆக்கம்: para | June 3, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை - இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என்...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 2 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 2, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

வீட்டை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். சமைத்த சமயங்களிலும் கூட வேலைக்கு போகும் அவசரத்திற்கு தகுந்த மாதிரி கலவைச் சோறு சமைத்து ஓடி  இருக்கிறேன். வீட்டில்  சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன்.  வீட்டு சாப்பாட்டிற்கு ஒரு மணம் உண்டு! தொடர்ந்து வீட்டுச்சாப்பாடு...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 9    
ஆக்கம்: para | June 1, 2008, 11:42 pm | தலைப்புப் பக்கம்

அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி. நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி,...தொடர்ந்து படிக்கவும் »

அப்பாக்களுக்கான ஒரு டெம்பிளேட் பதிவு!!    
ஆக்கம்: அபி அப்பா | May 30, 2008, 11:53 am | தலைப்புப் பக்கம்

நான் என் வயசுக்கும் இத்தன ஒரு விஷமத்தை பார்த்ததில்லை. அய்யோ என்னா விஷமம் என்னா விஷமம். அவனை பார்த்துகறத்துக்கே நாலு ஆளு வேணும்.காலையிலே அவங்க அம்மா எழுந்திருக்கும் போதே எழுந்துடுவான். ஆனா பாருங்க அப்பத்திலே இருந்து என் கிட்டத்தான் விளையாடிகிட்டு இருப்பான். நான்னா அவனுக்கு உசிரு.ராத்திரி தூக்கத்திலே எங்கே புரண்டு படுத்திருந்தாலும் முழிப்பு வந்துச்சுன்னா ஓடி...தொடர்ந்து படிக்கவும் »

PIT ஜூன் மாசம் போட்டிக்கு வந்துட்டோம்ல    
ஆக்கம்: இம்சை | May 30, 2008, 6:04 am | தலைப்புப் பக்கம்

மக்கா நீங்க கேட்ட தலைப்புல போட்டிருக்கேன் பாத்துக்கோங்க....1. குழந்தைக்குச் சோறூட்டும் தாய்3. ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சக ஊழியர்4. வண்டியை இழுத்துச் செல்லும் மாடு2. வீட்டுப்பாடம் எழுதும் பள்ளிச்சிறுவன்எங்க வீட்டு சின்ன இம்சை இன்னும் பள்ளிகூடம் போகல அதனால இந்த படம் கொஞ்சம் அட்ஜெஸ் மாடி...6. யாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மளிகை கடைகாரர்யாபாரத்தில...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 8    
ஆக்கம்: para | May 23, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும்...தொடர்ந்து படிக்கவும் »

மோகன் அண்ணா!    
ஆக்கம்: லக்கிலுக் | May 21, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்...தொடர்ந்து படிக்கவும் »

தேவாரமும் நானும்    
ஆக்கம்: ஆ.கோகுலன் | May 17, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »

கூத்துப் பார்க்கப் போன கூத்து    
ஆக்கம்: த.அகிலன் | May 17, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்

மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியில பொண்ணு வாறா பொண்ணு வாறா பொட்டு வண்டியில எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில்...தொடர்ந்து படிக்கவும் »

நினைவழியா நாட்கள் - 2    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 15, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்

அடுத்த நாள் வெள்ளனவே அப்பையாண்ணை வீட்டை வந்திட்டார். அப்பையாண்ணை எண்ட பெயர் எனக்குச் சிரிப்பாக் கிடக்கும். அதென்ன அப்பு பிறகு ஐயா பிறகு அண்ணை எண்டு நான் அம்மாட்டைக் கேட்பதுண்டு. ஆனா அவாவும் அப்பிடித்தான் கூப்பிடுறவ. அவரை மட்டுமில்ல அவரின்ர மூத்த மகளையும் நான் தங்கச்சியக்கா எண்டுதான் கூப்பிடுறனான். அப்பையாண்ணை வீட்டை வரேக்கையே எங்கையெங்கை செல் விழுந்தது எண்ட...தொடர்ந்து படிக்கவும் »

அப்பா......    
ஆக்கம்: கிருத்திகா | May 15, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்

அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »

தண்டவாளத்து வண்டவாளங்கள்…..    
ஆக்கம்: த.அகிலன் | May 14, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்

“வண்டி வண்டி புகைவண்டி வாகாய் ஓடும் புகைவண்டி கண்டி காலி கொழும்பெல்லாம் காணப்போகும் புகைவண்டி. சுக்குப் பக்குக் சுக்குப் பக்சுக் கூகூகூகூகூகூகூகூகூ” புகைவண்டியாகத்தான் எனக்கு இரயில் பழக்கமானது. ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்பதற்கு முன்னாலேயே நான் இரயிலில் பயணித்திருப்பதாக அம்மா பின்னாட்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நினைவிருப்பது இந்தப்பாடலை...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 7    
ஆக்கம்: para | May 13, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

ஆஸ்பத்திரி ராணிகள்…..    
ஆக்கம்: த.அகிலன் | May 13, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த...தொடர்ந்து படிக்கவும் »

அத்தை மகனே !    
ஆக்கம்: சுரேகா.. | May 12, 2008, 10:00 pm | தலைப்புப் பக்கம்

          என் அத்தைமகனை நான் என் பாட்டி வீட்டுக்குப்போகும்போதுதான் பார்த்தேன். மிகவும் அழகாக படியப்படிய தலையை வாரிக்கொண்டு, என்னை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அப்போதுதான் என் பாட்டி , தாத்தா , பெற்றோர் எல்லோரும் சொன்னார்கள்!