குசேலன் - 2 வருகிறது ஜாக்கிரதை...........
August 4, 2008, 9:13 am | தலைப்புப் பக்கம்
August 4, 2008, 9:13 am | தலைப்புப் பக்கம்
இடம் : குசேலன் 2 டிஸ்கசன் நடக்கும் இடம்நேரம் : நம்ம எல்லோருக்கும் கெட்ட நேரம்......இருப்பவர்கள் : விஜய், பி.வாசு, வடிவேலு, பேரரசு.வரமறுப்பவர்கள் : பசுபதி, நயந்தாரா, ரஜினிவாசு: என்ன எல்லோரும் வந்தாச்சா????? என்ன இது பாத்ரூம்ல யாரோ அழுகிற மாதிரி இருக்கு.(விஜய் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்)வாசு: விஜய் என்ன இது ? இன்னும் இந்தப் பழக்கம் உங்கள விட்டுப் போகலையா?????...தொடர்ந்து படிக்கவும் »
குசேலன் - ஏன் இந்த கொலை வெறி ???? விமர்சனம்
August 3, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்
August 3, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்
கதை:சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் நண்பனை பல காரணங்களுக்காகக் காணத் தவிக்கும் ஏழை முடிதிருத்தும் நண்பன் பற்றிய கதை.திரைக்கதை:இந்தக் கதையையே திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி எழுதிக்கொள்ளவும்.வசனம்:ரஜினியின் புகழ் பரப்பும் வசனங்களைச் சொன்னால் மட்டும் போதும் படம் 100 நாட்கள் ஓடி விடும் என்று சொன்ன ஜோசியக்காரனை பி.வாசு மாற்றி விடுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தசாவதாரம் கடலையுர் கிராமத்தில் இருந்து விமர்சனம்.
June 16, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்
June 16, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்
என்ன அண்ணாச்சி தசாவதாரம் படம் பாத்தீயளா??? எப்படி இருக்கு?"பாத்தம்வே என்னத்த சொல்ல"???அண்ணாச்சி....என்ன ஆளவந்தான் பார்ட் டூ மாதிரி ஆயிடுச்சா???சே..சே அப்படி இல்லவே ....படம் பரவாயில்லவே....என்ன சில இடத்துல தான் மனசொப்பல..விவரமா சொல்லுங்க அண்ணாச்சி.....நீயே சொல்லும்வே.... நாம தமிழ் படத்துக்குதான போயிருக்கொம்...ஆனா இங்கன பாதி பேரு என்ன பேசுரானே புரியல....அதுக்குத்தான் கீழே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தசாவதாரம் - திரை விமர்சனம்
June 15, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்
June 15, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்
உலகையே அழிக்கக் கூடிய ஒரு பயோ வெப்பன் தீவிரவாதிகளின் கையில் கிடைக்க விடாமல் செய்யும் நாயகனின் முயற்சி என்ற ஜேம்ஸ்பாண்டு / ஜாக்கிசான் வகைப்படக் கதைதான்.(கமல் சார் நீங்க மட்டும் தான் இங்கீலீசு படம் பாப்பீங்களா?? நாங்களும் பாப்போம்ல உ.ம் நம்பி பாத்திரம் ஓம் நமோ நாராயாணாய நமக என்று சொல்வது மெல்கிப்சன் "சுதந்திரம்" என்று கத்துவதைத் தேவையில்லாமல் நினைவூட்டுகிறது.)இதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சந்தோஷ் சுப்ரமணியமும், தமிழ் சினிமாவும்....
June 2, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்
June 2, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்
நேற்று உயிரைப் பணயம் வைத்தாவது சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்து விடுவது என்று முடிவு கட்டினேன்.ஒவ்வொரு திரையரங்காக பார்த்து கடைசியில் உதயம் வந்து சேர்ந்தேன்.சந்தோஷ் சுப்ரமணியம் டிக்கெட் இருக்கா என்று கேட்டதற்கு ஒருவர்.."வேணும்னா குருவி இருக்கு பாக்குறியா? என்றார்.தியேட்டர் என்றும் பாராமல் அவர் காலில் விழுந்து திடுத்திடுவென ஓடி ரோஹிணி வந்து சேர்ந்தேன்.50 நாட்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தரணி விஜய் அடுத்து இணையும் "குண்டு" (கற்பனைக்)கதை ரெடி...
May 4, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்
May 4, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்
"சார் அடுத்த படத்துக்கு கதை ரெடி" என்ற தரணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகப் பார்க்கிறார் விஜய்.ண்ணா இந்தப் படத்துக்கே வயத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு உட்காந்திருக்கோம்.அதுக்குள்ள அடுத்த படமா???ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு...சார் இது வேற மாதிரி இருக்கும்.கேளுங்க...விஜய் தலையை இடதும், வலதுமாக ஆட்டி ம் என்கிறார்.தரணி, சம்மதம் கொடுத்துவிட்டார் என்று நினைத்து கதையை...தொடர்ந்து படிக்கவும் »
உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??
May 4, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்
May 4, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்
உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி.."தம்பி எங்க வேலைபார்க்கிறான்???""Wipro வுல""சம்பளம் எவ்வளவு வரும்???""17000 வரும்.""என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி
குருவி - திரைவிமர்சனம்
May 4, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்
May 4, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரன் உதயநிதியின் ரெட்ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குருவி.குவாரியில் வில்லன்களால் அடிமைபடுத்தப் பட்டு இருக்கும் தந்தையையும்,மற்றவர்களையும் விஜய் காப்பாற்றுவது தான் கதை.படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் தரணி தூள் படத்தை ரீமேக் செய்துவிட்டாரோ??என்ற பயம் மனதில் எழுகிறது.திரிசாவை இழுத்துக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
அறை எண் 305 ல் கடவுள் - விமர்சனம்
April 21, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்
April 21, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்
கடவுளின் பவரையே லவட்டிக் கொண்டு போகும் இரண்டு மேன்சன் வாழ் இளைஞர்கள் பற்றிய கதையில் லாஜிக் என்ற வஸ்துவை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லைதான்.ஆபாசம்,வன்முறை இல்லாத,வித்தியாசமான படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் சிம்புதேவனைப் பாராட்டலாம்.கடவுளாகப் பிரகாஷ்ராஜ்...அழகாக செய்திருக்கிறார்.கடவுளாகவும்,பின்பு பவர் திருடப்பட்ட பிறகு சாதாரண மனிதனாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
யாரடி நீ மோகினி - திரை விமர்சனம்
April 8, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்
April 8, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்
தனுஷ் வேலைவெட்டி இல்லாத உருப்படாத இளைஞன்.அவருடைய பாசக்கார எதிரியான அப்பா ரகுவரன்.தீடீரென ஒரு நாள் வழியில் நயந்தாராவைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அவர் வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார் தனுஷ் :-)).தனக்குள் பற்றி எரியும் காதலை நயந்தாரவிடம் தனுஷ் சொல்ல "நோ" சொல்லிவிடுகிறார் நயன்.சிபாரிசுக்கு போகும் ரகுவரனையும் அவமானப்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்...வேறென்ன சொல்ல..(பதிவர் சந்...
April 4, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்
April 4, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்
தாழ்தளப் பேருந்தில்(Automatic Door)சென்றபடியால் காந்திசிலை சிக்னலில் இறங்க முடியாமல் கண்ணகி சிலை நிறுத்தத்தில் சென்று இறங்கினேன் :-((ஆடி அசைந்து நான் செல்வதற்குள் கூட்டம் களைகட்டத் துவங்கியிருந்தது.கூச்சத்தோடு என்னை அறிமுகம் செய்தவுடன் வினையூக்கி உங்கள் விமர்சனங்கள் படித்துள்ளேன்...தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுத்தார்.பதிவர் நித்யகுமாரன் அருகில் அமர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
பங்குச்சந்தை - சில நியாமான கேள்விகள்...
March 27, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்
March 27, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்
சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் (1,2)படித்தது,வீட்டில் தொலைந்துபோ என்று கொடுத்த 15000 ரூபாயை சந்தையில் முதலீடு செய்தது இதைத் தவிர எனக்கும் பங்குசந்தைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.இதற்கே "வாரன் பப்பட்"ரேஞ்சுக்குப் பேசி இப்போது வாயைத்திறந்தாலே "போதும்! அடங்கு!" என்று சொல்லப்படும் என் துர்பாக்கிய நிலை பற்றி இங்கு சொல்ல விரும்பவில்லை.:-((வவ்வால் அவர்களின் பங்குசந்தை...தொடர்ந்து படிக்கவும் »
வெள்ளித்திரை - திரைவிமர்சனம்
March 11, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்
March 11, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்
"From the makers of Mozhi"என்ற எதிர்பார்ப்போடு வந்திருக்கும் படம்.பாடம் 1 :(எந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்போடு செல்லக்கூடாது)சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இரண்டு இளைஞர்கள்."என்ன செய்தாலும் சரி, நடிகனாக ஆகியே தீருவேன்" என்று பிரகாஷ்ராஜும்,"தரமான இயக்குநராகத்தான் ஆவேன்"என்று பிருத்விராஜும் சினிமா என்ற மாய உலகை சுற்றி சுற்றி வருகின்றனர்.பிருத்வியின் கதையைத் திருடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சுஜாதா....மீள்பதிவு
February 28, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்
February 28, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்
சுஜாதா தமிழில் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது.நல்ல இலக்கியம் என்பதை வானமாகக் கொண்டு எழுத்தாளர்களைப் படிகளாகக் கருதினால் சுஜாதா என்ற படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு நிச்சயமாக செல்ல முடியாது.உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
அஞ்சாதே - திரைவிமர்சனம்
February 18, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
February 18, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
அலுவலகத்தில் ஆணி பிடுங்குவதற்காக பாண்டிச்சேரி அனுப்பியிருந்தார்கள்.ஆணியெல்லாம் பிடுங்கி முடித்தபின்பு நைட்சோ - அஞ்சாதே.சத்யா,கிருபா என இரு நண்பர்கள்.இருவரின் அப்பாக்களும் காவல்துறையில் பணிபுரிகிறார்கள்.கிருபா போலீஸ் ஆகியே தீருவது என்ற வெறியோடு பயிற்சி எடுக்கிறான்.சத்யாவோ போலீஸில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஸ்டீரீட் தாதாவாகச் சுற்றுகிறான்.சத்யாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது?
February 17, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்
February 17, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்
"பூஜா - சிங்களத்துக்காரிஆரியா - மலையாளத்தான். ஜம்ஷத்துண்ணு பேருகோணங்கி - தேவமாரு."மேலே கூறிய அறிய தகவல்கள் அனைத்தும் நம் எழுத்துலக டைனசோரான திரு.ஜெயமோஹன் அவர்களின் (அதிகமில்லை ஜென்டில்மேன்...)2 பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட தகவல்கள்.இரண்டு பதிவுகளில் இருந்து 3 பேர்களின் சமூகத்தை அறிய முடிகிறது என்றால்,அவருடைய லட்சக்கணக்கான கட்டுரைகளைப் படித்தால் 10...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!!
February 15, 2008, 10:42 pm | தலைப்புப் பக்கம்
February 15, 2008, 10:42 pm | தலைப்புப் பக்கம்
"எல்லாவற்றையும் பகடி செய்வது சிதைந்த மனது" என்று அய்யனார் அவர்களின் பதிவில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஆம் அப்படிப் பார்த்தால் அந்த சிதைந்த மனது எனக்கும் உண்டு.நான் கொஞ்சம் பருமனாக இருப்பேன்.(கொஞ்சம் என்பது பொய்).என்னுடைய கல்லூரிப்பருவத்தில் இதனால் நம்மை யாரும் ஓட்டுவார்களோ என்ற தாழ்வுமனப்பான்மையில் நான் எல்லோரையும் ஓட்ட ஆரம்பித்தேன் நகைச்சுவை என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
ராஜ்தாக்கரேவும்,கலைஞரும் ஒன்றா? - என்ன கொடுமை சார் இது?
February 12, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்
February 12, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்
//மலேசிய தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுக்கலாம்; நான் மராட்டியர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா என நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்//அடி கொடுப்பவர்களும், அடி வாங்குபவர்களும் ஒன்று என்று கண்டுபிடித்து சொன்ன ராஜ்தாக்கரே இன்று முதல் "இந்தியாவின் ஒரே விஞ்ஞானி"என்று அன்போடு அழைக்கப்படுவார்.(courtesy -...தொடர்ந்து படிக்கவும் »
A.R.ரஹ்மான் இது நியாயமா??.. LIVE CONCERT ஒரு பார்வை
February 11, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்
February 11, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்
சனிக்கிழமை பக்கத்து வீட்டு பையன் ஓடோடி வந்தான்."அண்ணா என்கிட்ட live concert க்கு 2 டிக்கெட் இருக்கு.உங்ககிட்ட வண்டி இருக்கு.உங்க வண்டில போலாம்னு சொன்னீங்கன்னா உங்களைக் கூட்டிட்டு போறேன்" என்றான்.ஒரு நிமிடம் பொல்லாதவன் தனுஷ் போல் உணர்ந்தேன்."சண்முகம் உட்றா வண்டிய"ன்னு(நாட்டாமை) சொல்லிக்கிட்டு என் சூரப்புலியைக் கிளப்பினேன்.(தெரியாதவர்களுக்கு சூரப்புலி என்பது ஹீமேனின்...தொடர்ந்து படிக்கவும் »
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்
February 2, 2008, 11:36 am | தலைப்புப் பக்கம்
February 2, 2008, 11:36 am | தலைப்புப் பக்கம்
ஒரு சேஞ்சுக்கு படத்தின் நாயகன் நா.அழகப்பனே வந்து படத்தை விமர்சிக்கிறார்.ஓவர் டூ நா.அழகப்பன்.வணக்கங்க.நாந்தான் நாவன்னா.அழகப்பன்.உங்க படத்த நீங்களே விமர்சனம் பண்ணுங்கன்னு நம்ம செல்வம் தம்பி கூப்டுச்சு.சரி தான் கழுதய பண்ணிட்டு போவோமுன்னு வந்தேன்.படத்துல நான் ஒரு நாடக ட்ரூப் வச்சிருக்கேன்.(தியாகு,மனோபாலா தவிர மத்ததெல்லாம் நம்ம பசங்க தான்).ஓப்பனிங் சாங்க முடிச்சிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்
January 21, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்
January 21, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்
முன்குறிப்பு:"சரி வாடா படத்துக்குப் போகலாம்" என்றேன் தம்பியிடம்."என்ன படத்துக்கு?" என்றான்."அது வந்து,அது வந்து...பிரிவோம் சந்திப்போம்"கு போகலாம் என்றேன்."என்னது?"இல்லடா படம் நல்லா இருக்காம்..போய்த்தான் பாப்போமே !!!"இப்படித்தான் சொல்லி மாயக்கண்ணாடிக்கு கூட்டிட்டுப் போன.சேரன் இனிமே என் படத்துக்கு வருவியா?வருவியானு செருப்பாலயே அடிச்சுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
பீமா - என்ன கொடுமை சார் இது? (விமர்சனம்)
January 16, 2008, 7:03 am | தலைப்புப் பக்கம்
January 16, 2008, 7:03 am | தலைப்புப் பக்கம்
ரீலிஸ் ஆன இரண்டாவது நாளே கவுன்டரில் டிக்கெட் கிடைத்தது என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.அது அப்படி இல்லை என்று படம் முடிந்து வெளியே வரும் போது தான் தெரிந்தது.படத்தின் ஹீரோவாக அடித்திருப்பவர்...சாரி நடித்திருப்பவர் சேது,அந்நியன் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கும் விக்ரம்.வில்லனாக நடித்திருப்பவர் பாட்ஷா படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கல்லூரி - விமர்சனம்
December 9, 2007, 10:17 pm | தலைப்புப் பக்கம்
December 9, 2007, 10:17 pm | தலைப்புப் பக்கம்
+2 வில் சேர்ந்து படிக்கும் 9 நண்பர்கள்(4 பெண்கள்,5 ஆண்கள்) மதுரைக்கு அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக B.A வரலாறு பிரிவில் சேர்கிறார்கள்.அங்கு குடும்ப சூழ்நிலை காரணமாக டெல்லியில் படிக்க வேண்டிய பெண் (தமன்னா) தற்காலிகமாக அந்த கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளது.ஆரம்பத்தில் இவர்களோடு ஒட்டாமல் இருக்கும் அந்தப் பெண், ராகிங்கில் இருந்து காப்பாற்றியவுடன் இவர்களோடு நட்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தமிழ்சினிமாவும் - பிள்ளைக் காதல்களும்
December 5, 2007, 10:16 pm | தலைப்புப் பக்கம்
December 5, 2007, 10:16 pm | தலைப்புப் பக்கம்
"அறியாத வயசு, புரியாத மனசுஇரண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்"யுவனின் இசையில் இளையராஜாவின் வாய்சில் மனசை அள்ளும் பாடல்.பாடலைக் கேட்டு முடித்த பிறகு என்றாவது நமக்கு குற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்
December 4, 2007, 3:07 am | தலைப்புப் பக்கம்
December 4, 2007, 3:07 am | தலைப்புப் பக்கம்
முதலில் கதை.பத்திரக் கோட்டை கிராமத்தில் ஊர் மெச்ச வாழ்ந்து வரும் தம்பதிகள் மாதவபடையாச்சி,வேலாயி.அவர்களுக்கு 3 ஆண்குழந்தைகள்,2 பெண்குழந்தைகள்.விவசாயியாக இருக்கும் மாதவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
அழகிய தமிழ்மகன் -பாடலும் போலியா???
November 26, 2007, 3:06 am | தலைப்புப் பக்கம்
November 26, 2007, 3:06 am | தலைப்புப் பக்கம்
அழகிய தமிழ்மகன் கதை "போலி" கதை என்பது நாம் அறிந்ததே.அப்படத்தில் இடம் பெற்று இருக்கும் "மதுரைக்குப் போகாதடி"என்ற பாடலைக் கேட்ட அன்றிலிருந்தே மண்டைக்குள் ஒரு குரல்.ஆ! தொடர்கதையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

